• முகப்பு
  • .
  • .
  • .
  • .

வியாழன், 24 டிசம்பர், 2009

யாரிவன்?....



ஒரு சுய சேவை சிற்றுண்டி
உணவகத்தில்,
தேவையான உணவினைத் தாங்களே
வாங்கிக்கொள்ள வேண்டும் என்பது
தெரியாதது போலவும் ,
கால் மேல் கால் போட்டுக்கொண்டும்,
சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டும்,
காத்துக் கொண்டும் இருந்த
அந்த பெண்ணைப் பார்க்க
பாவமாய் இருந்ததால்,
அருகில் சென்று
"இங்கு பணியாட்கள் இல்லை"
என்ற பலகையை நான் சுட்டிக்காட்ட,
உடனே அவள்,
யார் சொன்னது என்பதுபோல
ஒரு நமட்டுச் சிரிப்போடு
வேறு திசையில் கை காட்ட,
அங்கே
வேர்த்து விறுவிறுத்து
உணவினை எடுத்துக்கொண்டு
இருகைகளிலும் தூக்க முடியாமல்
செயற்கைச் சிரிப்புடன்
அவளை நோக்கி நடந்து
வந்தவனைப் பார்த்தவுடன்
தெரிந்து கொண்டேன்.
அவளின் கணவனாக
இருக்குமென்று.....
-----------------------------------------------------------------------------------------------------------------------------
சுயசேவை உணவகம் - self service hotel
-----------------------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 18 டிசம்பர், 2009

மின்கவிதை..

லைப்பதிவில்
கவிதையொன்றை
எழுத முயன்றுகொண்டிருந்தான்..

ட்டென மின்னரட்டையில்
வந்தார், அமெரிக்க மேலாளர்..
What is the status Mr.? என்றார்...

பட பட வென்று கைகள்
பதிலளிக்கத் தொடங்கின..

The
Development
activity
is
going
on Sir ....

புதன், 16 டிசம்பர், 2009

சட்டென ஒட்டிக்கொண்ட பாடல்...

--------------------------------------------------------------------------------------------------------------------------------------
படம்: கந்தக்கோட்டை.
இசை: தீனா.
பாடலாசிரியர்:விவேகா
பாடியவர்: நகுலன்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

Drag from here

இரு சக்கரவாகனமாக அவளது விழிகள்

விபத்தாகி விழுந்தது ஏனோ எனதிரு விழிகள்


அவள் புருவத்தை சாய்த்துப் பார்க்கவில்லை

புன்னகையில் ஒரு மாற்றமில்லை

கால் விரலால் நிலம் தோண்டவில்லை

கடந்தபின் திரும்பி சிரிக்கவுமில்லை

எப்படி என்னுள் காதல் வந்தது

எப்படி என்னுள் காதல் வந்தது


எச்சில் உணவு கொடுக்கவில்லை

எனக்காய் இரவில் விழிக்கவில்லை

பார்த்ததும் ஆடை திருத்தவில்லை

பாஷையில் முனைகளை சேர்க்கவுமில்லை

எப்படி என்னுள் காதல் வந்தது

எப்படி என்னுள் காதல் வந்தது


என்னைப் பார்த்ததும் குழந்தையைத் தூக்கி முத்தம் கொடுக்கவில்லை

என் பேர் கேட்டதும் கன்னங்கள் இரண்டும் சிவந்துப்போகவில்லை

என் தெருவில் அவள் அடிக்கடி தினுசாய் திரிந்து பார்த்ததில்லை

என்னிடம் எதுவும் பிடித்ததுபோல புகழ்ந்து உரைத்ததில்லை

ஆனாலும் …. ஆனாலும் … ஆனாலும் . .

எப்படி என்னுள் காதல் வந்தது

அதை என்னிடமே தான் கேட்கத்தோணுது


என்னிடம் உள்ள கெட்டப்பழக்கத்தை தட்டி கேட்டதில்லை

சாப்பிடும்போது அவளை நினைத்து நான் தும்மல் போட்டதில்லை

அவள் கனவில் நானும் வந்து போனதாய் எந்தச் சுவடுமில்லை

ஒரு நாள் கூட நள்ளிரவில் குறுஞ்செய்தி வந்ததில்லை

ஆனாலும் …. ஆனாலும் … ஆனாலும் . ...

எப்படி என்னுள் காதல் வந்தது

அதை எப்படி நான் போய் சொல்வது

[அவள் புருவத்தை ...]

Stop Dragging

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

திங்கள், 14 டிசம்பர், 2009

கலைத்தல்....






டல் நுரைகள் மட்டும்
கண்ணுக்குப் புலப்படும்
ஓர் அதிகாலை நேரத்தில்,

நாலா பக்கமும்
ஓர் அரையிருள் வெறித்த
கடலோர மணலில்,

டக்கி வைத்திருந்த காலை
நீட்ட முடியாமலும் ,

ள் சென்ற உப்புக்
காற்றை சுவாசிக்க
முடியாமலும் ,

நிசப்தத்தை கிழித்துவிட்டு
எழும் கடலலையின்
சீற்றத்தால் வந்த
பயத்தை போக்க முடியாமலும் ,

வ்விடத்தை விட்டு
அகல நினைத்தவனின்
இடுப்பு வரை
உப்பு நீர் சூழ ,

ணர்விழந்து போன
கால்களால்
நிலை தடுமாறி
நீருக்குள் அமிழ ,

நுரையீரல் நுண்ணறைகளை
நீர் ஆக்ரமிக்க ,

மூச்சுத் திணறி
சாகத் திரிந்தவன் ,
சட்டென எழுந்தான் ....

முகத்தில் மூடிய
போர்வையை தூக்கி
எறிவதற்காகவும் ,
குறுக்கிய கால்களை
வேகமாய் நீட்டுவதற்காகவும் ,
ஈரமான ஆடையை
மாற்றுவதற்காகவும்.....
--------------------------------------------------------------------

திங்கள், 7 டிசம்பர், 2009

பிறந்தநாள் பரிசு


------------------------------------------------------------------------------------------------
வெற்றிலையை எடுத்து
காம்பைக் கிள்ளி
கையில் வைத்துக்கொண்டு
என்னைத் தேடிய அமத்தா..

ழுகின்ற என்னைத் தேற்ற
அம்மாவிடம் பொய்யாய் அடிவாங்கி
பொய்யாய் அழுது என்னை
சிரிக்க வைத்த அண்ணா....

நான் கழற்றி வைத்த
சட்டைப் பையில்
பீடிக்கும் டீக்கும் உரிமையோடு
காசு துழாவும் அப்பா....

யிறு எவ்வளவு வளர்ந்தாலும்
ஏண்டா இளைச்சுட்டேன்னு
கூசாமல் கேட்கும் அம்மா...

நீங்கள் எல்லாம் என்னை
வழியனுப்பிவிட்டு திரும்பும்போது
எனக்குத் தெரியாமல்
உங்கள் கண்களில் இருந்து
வந்த ஒரு சொட்டு
கண்ணீர்த்துளியில் இருந்து
எடுத்துக்கொண்டேன்

ன் பிறந்தநாள் பரிசை..
-------------------------------------------------------------------------------------------------

திங்கள், 30 நவம்பர், 2009

பேருந்து தினம்



ன்று பேருந்து தினம். ,
தேர்வைக்கூட கண்டுகொள்ளாமல்
கொண்டாட நினைத்த தினம்.....

நாயகி பேருந்துக்கு
காகிதப்பூ அலங்காரம்,
பூக்கடை நண்பன் தயவில்
ஒரு குறைந்த விலை
பேருந்துயர மாலை,
பிறகு என் கைவண்ணத்தில்
உருவான முப்பரிமாண
எழுத்துக்களாலான முகப்பு அட்டை....

நாயகனுக்கு ஒரே ஒரு,
வெள்ளைப் புத்தாடை.....

பேருக்கு, ஒரு கோவிலில்
பூஜை செய்த பின்,
"மன்மத ராசா" வின் இசையோடு
ஒத்திசைவாய் குலுங்கியபடி
நகர்ந்தது பேருந்து......

ங்கள் ஆட்டத்தை
ஒரு தமிழ் நாடு அரசு
கடுப்போடு வெறித்துவிட்டு
புகையை கக்கிக் கடந்து போக,
கடுப்பான நம் நாயகன்,
அதி வேகமாய் அரசைக் கடக்க முயல,
புகையில் தொடங்கியது
ஒரு பகைப் போட்டி...

போட்டியின் நடுவே ஒரு
பைக் குறுக்கே பாய
நாயகன் பயத்தில் ஓரங்கட்ட
நிலை தடுமாறிச் சாய்ந்தது
சாலையோரப்பள்ளத்தில்..

டிக்கொண்டு வந்த நாங்கள்,
அமைதியாய் வெளியேற முயல,
ஆடாமல் வந்த பெண்கள்
கூச்சலிட்டே வெளியே வர
வந்தமர்ந்தோம் சாலையோரம்...

யாருக்கும் உயிர்ச்சேதம்
இல்லையெனத் தெரிந்தபின்பு
தொடங்கியது மறுபடியும்
குத்தாட்டம் நடு ரோட்டில்...

யிர்பிழைத்ததற்காக அல்ல...
எங்களோடு பயணிக்காமலே
மடிந்து
போன அன்றைய
கணிதத்தேர்வுக்காக...
-------------------------------------------------------------------------------------------------
காதலை விட்டு வெளியே வந்து, என்னால் முடிந்த வரை "Enter " பட்டனைத் தட்டி தட்டி வடித்த வரிகள் இவை...குறையிருந்தாலும், நிறையிருந்தாலும் மறக்காமல் கருத்துரையில் தெரிவிக்கவும்..
-------------------------------------------------------------------------------------------------

வியாழன், 19 நவம்பர், 2009

குறுந்தகட்டுக்கிறுக்கல்கள்-1



------------------------------------------------------------------------------------------------

ணத்துடன்
தொலைந்து போனது,
என் பணப்பை.
பணம் போன வருத்தத்தில்
நான்...
நீ தந்த ஒற்றை நாணயம்
போன வருத்தத்தில்
என் மனம்....
-------------------------------------------------------------------------------------------------
ம் தேர்வு முடிவுகள்
அறிவிப்பு பலகையில்,
என் விரல் தேடியது
என் பெயரை,
என் விழி தேடியது,
உன் பெயரை....
-------------------------------------------------------------------------------------------------

-------------------------------------------------------------------------------------------------
நீ என்னைப் பார்த்து
கண் சிமிட்ட
நினைக்கிறாய்.
நான் அதை பார்த்து
கண் சிமிட்ட
மறக்கிறேன்....
-------------------------------------------------------------------------------------------------
நீ
பறித்து,
அரைத்து,
பூசிக்கொண்ட
மகிழ்ச்சியில்,
குளிர்ந்து போனது,
மருதாணி.....
-------------------------------------------------------------------------------------------------
கத்தின் அழகு
முகத்தில் தெரியுமாம்.
யார் சொன்னது.
உன் முகத்தின் அழகுதான்
எப்போதும் என்
அகத்தில் தெரியும்.....
-------------------------------------------------------------------------------------------------
[எங்கே என்னைப்பார்த்து யாராச்சும் "யாருமே இல்லாத வலையிலே யாருக்காகடா எழுதுறேன்னு " கேட்டு விடுவாங்களோ என்று பயத்துடன் பதிவை தொடங்கினேன். ] சென்ற பதிவில் நான் எழுதிய கவிதையை பாராட்டி, என்னை ஊக்கப்படுத்திய அனைத்து (மூன்று) அன்பர்களுக்கும் நன்றி. என் கல்லூரி காலத்தில் கிறுக்கியவற்றை இங்கே பதித்துள்ளேன். கோச்சுக்காம படிங்க....

நன்றி: இணைய தளம் (படங்களுக்காக)
-------------------------------------------------------------------------------------------------

வியாழன், 12 நவம்பர், 2009

சேறு



-------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------
நீ இரவாடை அணிந்து,
வீட்டைப் பெருக்கும் பொழுதும்...
ன்னலோரப் பேருந்தில்,
உன் ஆடையோடு
காற்றுவிளையாடும் பொழுதும்...
ழை நீரில் நீ ஆடையைப் பிடித்து
நடக்கும் பொழுதும்...
ப்படியோ வந்து
என் மனதில்
அப்பிகொள்ளும்,
சேறு...

-------------------------------------------------------------------------------------------------
" சென்ற வாரம் பெய்த மழையால், நான் தங்கி இருந்த பகுதி முழுதும் சேறானது. இந்த சாலையில் தான் தினமும் நான் நடந்து அலுவலகம் செல்ல வேண்டும் .. செல்லும் வழியில் தோன்றிய ஒன்று....
-------------------------------------------------------------------------------------------------


புதன், 4 நவம்பர், 2009

வித்தியாசமா ஒரு வித்தியாசம் கண்டுபிடிப்போம்...

இப்ப கண்டு பிடிக்க முடியாது!!! கொஞ்ச காலம் பொறுத்து இருப்போம்.!!!


திங்கள், 26 அக்டோபர், 2009

பசுமை வயல்.......கரட்டடிபாளையம்.



-------------------------------------------------------------------------------------------------
எம் பாரத அன்னையின்
பச்சைப் பட்டாடையில்
ஓர் ஒற்றை நூல்...
பசுமை வயல்-கரட்டடிபாளையம்..
-------------------------------------------------------------------------------------------------

ஊருக்கு சென்ற பொழுது "கிளிக்'கியவை........................


'திடுதிடுப்பு'ன்னு சொல்லுவோம்....





வாய்க்கால்.
வாய்க்கால்.



வியாழன், 22 அக்டோபர், 2009

29-06-1999




திங்கள், 12 அக்டோபர், 2009

பிதாகரஸ் துயரம்!!!! (சாரி தியரம்)



பொழுது போகாம இருந்தப்போ , எம்.எஸ்.பெயின்ட் ல ஏதோ இந்த மாதிரி ஒரு படம் வரைந்தேன். வரைந்த பின் தான் தெரிந்தது, நான் என்னை அறியாமலே பிதாகரஸ் தியரத்தை வரைந்திருக்கிறேன் என்று.....................


வியாழன், 1 அக்டோபர், 2009

இது ஒரு சோதனைப் பதிவு...