• முகப்பு
  • .
  • .
  • .
  • .

திங்கள், 14 டிசம்பர், 2009

கலைத்தல்....






டல் நுரைகள் மட்டும்
கண்ணுக்குப் புலப்படும்
ஓர் அதிகாலை நேரத்தில்,

நாலா பக்கமும்
ஓர் அரையிருள் வெறித்த
கடலோர மணலில்,

டக்கி வைத்திருந்த காலை
நீட்ட முடியாமலும் ,

ள் சென்ற உப்புக்
காற்றை சுவாசிக்க
முடியாமலும் ,

நிசப்தத்தை கிழித்துவிட்டு
எழும் கடலலையின்
சீற்றத்தால் வந்த
பயத்தை போக்க முடியாமலும் ,

வ்விடத்தை விட்டு
அகல நினைத்தவனின்
இடுப்பு வரை
உப்பு நீர் சூழ ,

ணர்விழந்து போன
கால்களால்
நிலை தடுமாறி
நீருக்குள் அமிழ ,

நுரையீரல் நுண்ணறைகளை
நீர் ஆக்ரமிக்க ,

மூச்சுத் திணறி
சாகத் திரிந்தவன் ,
சட்டென எழுந்தான் ....

முகத்தில் மூடிய
போர்வையை தூக்கி
எறிவதற்காகவும் ,
குறுக்கிய கால்களை
வேகமாய் நீட்டுவதற்காகவும் ,
ஈரமான ஆடையை
மாற்றுவதற்காகவும்.....
--------------------------------------------------------------------

10 நினைவலைகள்:

அட சொன்னது…

// ஈரமான ஆடையை
மாற்றுவதற்காகவும்// :-)

பளிச்

ஜெனோவா சொன்னது…

மிகப் பிடித்திருந்தது நண்பா , தொடர்ந்து எழுது!
வாழ்த்துக்கள்

Marimuthu Murugan சொன்னது…

#நன்றிங்க "அடலேறு"
#நன்றிங்க "ஜோ"

Prakash சொன்னது…

மீண்டும் பாராட்டுகள் உன் கவிதைக்கு...

நேசமித்ரன் சொன்னது…

மிக நல்ல முயற்சி மாரி முத்து

தொடர்ந்து எழுதுங்க வாழ்த்துகள்

Marimuthu Murugan சொன்னது…

# பிரகாஷ் - நன்றி தோழா..
#நேசமித்திரன் - வணக்கம் சார்...முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி...
உங்கள் பதிலைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ந்தேன்...
உங்கள் கவிதைகளைப் பார்த்து வியந்துகொண்டு இருப்பவர்களில் நானும் ஒருவன்.....

Cable சங்கர் சொன்னது…

அடடா..உச்சா போயிட்டானா.. நல்லாருக்குங்க

Marimuthu Murugan சொன்னது…

வணக்கம் கேபிள் சார்...
ஆமாங்க..
நன்றிங்க..
( கொத்து பரோட்டா போட்டு கலக்குறீங்களே!!)

இரசிகை சொன்னது…

:)

Marimuthu Murugan சொன்னது…

ௐ ௐ ௐ ௐ ௐ ௐ ௐ
ௐ ௐ ௐ ௐ ௐ ௐ ௐ
ௐ ௐ
.....ௐ ௐ
ௐ ௐ
.....ௐ ௐ ௐ ௐ ௐ
ௐ ௐ
.....ௐ ௐ ௐ ௐ ௐ
ௐ ௐ
.....ௐ ௐ.....ௐ ௐ
.........................ௐ ௐ
............ௐ ௐ ௐ ௐ ௐ
............ௐ ௐ ௐ ௐ ௐ..ன்றிகள்
............ௐ ௐ