• முகப்பு
  • .
  • .
  • .
  • .

புதன், 16 டிசம்பர், 2009

சட்டென ஒட்டிக்கொண்ட பாடல்...

--------------------------------------------------------------------------------------------------------------------------------------
படம்: கந்தக்கோட்டை.
இசை: தீனா.
பாடலாசிரியர்:விவேகா
பாடியவர்: நகுலன்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

Drag from here

இரு சக்கரவாகனமாக அவளது விழிகள்

விபத்தாகி விழுந்தது ஏனோ எனதிரு விழிகள்


அவள் புருவத்தை சாய்த்துப் பார்க்கவில்லை

புன்னகையில் ஒரு மாற்றமில்லை

கால் விரலால் நிலம் தோண்டவில்லை

கடந்தபின் திரும்பி சிரிக்கவுமில்லை

எப்படி என்னுள் காதல் வந்தது

எப்படி என்னுள் காதல் வந்தது


எச்சில் உணவு கொடுக்கவில்லை

எனக்காய் இரவில் விழிக்கவில்லை

பார்த்ததும் ஆடை திருத்தவில்லை

பாஷையில் முனைகளை சேர்க்கவுமில்லை

எப்படி என்னுள் காதல் வந்தது

எப்படி என்னுள் காதல் வந்தது


என்னைப் பார்த்ததும் குழந்தையைத் தூக்கி முத்தம் கொடுக்கவில்லை

என் பேர் கேட்டதும் கன்னங்கள் இரண்டும் சிவந்துப்போகவில்லை

என் தெருவில் அவள் அடிக்கடி தினுசாய் திரிந்து பார்த்ததில்லை

என்னிடம் எதுவும் பிடித்ததுபோல புகழ்ந்து உரைத்ததில்லை

ஆனாலும் …. ஆனாலும் … ஆனாலும் . .

எப்படி என்னுள் காதல் வந்தது

அதை என்னிடமே தான் கேட்கத்தோணுது


என்னிடம் உள்ள கெட்டப்பழக்கத்தை தட்டி கேட்டதில்லை

சாப்பிடும்போது அவளை நினைத்து நான் தும்மல் போட்டதில்லை

அவள் கனவில் நானும் வந்து போனதாய் எந்தச் சுவடுமில்லை

ஒரு நாள் கூட நள்ளிரவில் குறுஞ்செய்தி வந்ததில்லை

ஆனாலும் …. ஆனாலும் … ஆனாலும் . ...

எப்படி என்னுள் காதல் வந்தது

அதை எப்படி நான் போய் சொல்வது

[அவள் புருவத்தை ...]

Stop Dragging

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

4 நினைவலைகள்:

LazySystemAdmin சொன்னது…

நீ மாறவே இல்லடா மாரி.... +2ல பாட்டு வரி எல்லாம் அலசி ஆராய்வோம்ல.. ஞாபகம் இருக்கா?

~பார்த்தி
http://lazysystemadmin.blogspot.com/

Marimuthu Murugan சொன்னது…

#பார்த்தி - ரொம்ப தேங்க்ஸ் நண்பா..
(அதெல்லாம் மறக்க முடியுமா நண்பா.......நீ கூட எந்த ஒரு பாட்டையும் உணர்ச்சி பொங்க பாடிக்கிட்டே இருப்பியே.....)

இரசிகை சொன்னது…

yenakkum paattunna remmba remmba rembba ishtam...

neenga pathivula pottirukkum paadalai innum kettathillai..

but,varikal azhagaa irukku:)

Marimuthu Murugan சொன்னது…

ஆமாங்க #இரசிகை.....!!....அழகான வரிகள் தான்...
முதல் முறை கேட்டவுடன் பிடித்துபோகும் பாடல்களில் இதுவும் ஒன்று...
நன்றிகள்