சுயசேவை உணவகம் - self service hotel
வியாழன், 24 டிசம்பர், 2009
யாரிவன்?....
சுயசேவை உணவகம் - self service hotel
எழுத்து: Marimuthu Murugan at PM 5:08 5 நினைவலைகள்
வெள்ளி, 18 டிசம்பர், 2009
மின்கவிதை..
புதன், 16 டிசம்பர், 2009
சட்டென ஒட்டிக்கொண்ட பாடல்...
Drag from here
இரு சக்கரவாகனமாக அவளது விழிகள்
விபத்தாகி விழுந்தது ஏனோ எனதிரு விழிகள்
அவள் புருவத்தை சாய்த்துப் பார்க்கவில்லை
புன்னகையில் ஒரு மாற்றமில்லை
கால் விரலால் நிலம் தோண்டவில்லை
கடந்தபின் திரும்பி சிரிக்கவுமில்லை
எப்படி என்னுள் காதல் வந்தது
எப்படி என்னுள் காதல் வந்தது
எச்சில் உணவு கொடுக்கவில்லை
எனக்காய் இரவில் விழிக்கவில்லை
பார்த்ததும் ஆடை திருத்தவில்லை
பாஷையில் முனைகளை சேர்க்கவுமில்லை
எப்படி என்னுள் காதல் வந்தது
எப்படி என்னுள் காதல் வந்தது
என்னைப் பார்த்ததும் குழந்தையைத் தூக்கி முத்தம் கொடுக்கவில்லை
என் பேர் கேட்டதும் கன்னங்கள் இரண்டும் சிவந்துப்போகவில்லை
என் தெருவில் அவள் அடிக்கடி தினுசாய் திரிந்து பார்த்ததில்லை
என்னிடம் எதுவும் பிடித்ததுபோல புகழ்ந்து உரைத்ததில்லை
ஆனாலும் …. ஆனாலும் … ஆனாலும் . .
எப்படி என்னுள் காதல் வந்தது
அதை என்னிடமே தான் கேட்கத்தோணுது
என்னிடம் உள்ள கெட்டப்பழக்கத்தை தட்டி கேட்டதில்லை
சாப்பிடும்போது அவளை நினைத்து நான் தும்மல் போட்டதில்லை
அவள் கனவில் நானும் வந்து போனதாய் எந்தச் சுவடுமில்லை
ஒரு நாள் கூட நள்ளிரவில் குறுஞ்செய்தி வந்ததில்லை
ஆனாலும் …. ஆனாலும் … ஆனாலும் . ...
எப்படி என்னுள் காதல் வந்தது
அதை எப்படி நான் போய் சொல்வது
[அவள் புருவத்தை ...]
Stop Dragging
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
எழுத்து: Marimuthu Murugan at PM 2:11 4 நினைவலைகள்
தொகுப்பு: பிடித்த பாடல்
திங்கள், 14 டிசம்பர், 2009
கலைத்தல்....
எழுத்து: Marimuthu Murugan at AM 11:23 10 நினைவலைகள்
திங்கள், 7 டிசம்பர், 2009
பிறந்தநாள் பரிசு
காம்பைக் கிள்ளி
கையில் வைத்துக்கொண்டு
என்னைத் தேடிய அமத்தா..
அழுகின்ற என்னைத் தேற்ற
அம்மாவிடம் பொய்யாய் அடிவாங்கி
பொய்யாய் அழுது என்னை
சிரிக்க வைத்த அண்ணா....
நான் கழற்றி வைத்த
சட்டைப் பையில்
பீடிக்கும் டீக்கும் உரிமையோடு
காசு துழாவும் அப்பா....
வயிறு எவ்வளவு வளர்ந்தாலும்
ஏண்டா இளைச்சுட்டேன்னு
கூசாமல் கேட்கும் அம்மா...
நீங்கள் எல்லாம் என்னை
வழியனுப்பிவிட்டு திரும்பும்போது
எனக்குத் தெரியாமல்
உங்கள் கண்களில் இருந்து
வந்த ஒரு சொட்டு
கண்ணீர்த்துளியில் இருந்து
எடுத்துக்கொண்டேன்
என் பிறந்தநாள் பரிசை..
எழுத்து: Marimuthu Murugan at AM 9:55 9 நினைவலைகள்
தொகுப்பு: அனுபவம், கவிதை, சுயபுராணம்
திங்கள், 30 நவம்பர், 2009
பேருந்து தினம்
தேர்வைக்கூட கண்டுகொள்ளாமல்
கொண்டாட நினைத்த தினம்.....
நாயகி பேருந்துக்கு
காகிதப்பூ அலங்காரம்,
பூக்கடை நண்பன் தயவில்
ஒரு குறைந்த விலை
பேருந்துயர மாலை,
பிறகு என் கைவண்ணத்தில்
உருவான முப்பரிமாண
எழுத்துக்களாலான முகப்பு அட்டை....
நாயகனுக்கு ஒரே ஒரு,
வெள்ளைப் புத்தாடை.....
பேருக்கு, ஒரு கோவிலில்
பூஜை செய்த பின்,
"மன்மத ராசா" வின் இசையோடு
ஒத்திசைவாய் குலுங்கியபடி
நகர்ந்தது பேருந்து......
எங்கள் ஆட்டத்தை
ஒரு தமிழ் நாடு அரசு
கடுப்போடு வெறித்துவிட்டு
புகையை கக்கிக் கடந்து போக,
கடுப்பான நம் நாயகன்,
அதி வேகமாய் அரசைக் கடக்க முயல,
புகையில் தொடங்கியது
போட்டியின் நடுவே ஒரு
பைக் குறுக்கே பாய
நாயகன் பயத்தில் ஓரங்கட்ட
நிலை தடுமாறிச் சாய்ந்தது
சாலையோரப்பள்ளத்தில்..
ஆடிக்கொண்டு வந்த நாங்கள்,
அமைதியாய் வெளியேற முயல,
ஆடாமல் வந்த பெண்கள்
கூச்சலிட்டே வெளியே வர
வந்தமர்ந்தோம் சாலையோரம்...
யாருக்கும் உயிர்ச்சேதம்
இல்லையெனத் தெரிந்தபின்பு
தொடங்கியது மறுபடியும்
குத்தாட்டம் நடு ரோட்டில்...
உயிர்பிழைத்ததற்காக அல்ல...
எங்களோடு பயணிக்காமலே
மடிந்து போன அன்றைய
எழுத்து: Marimuthu Murugan at PM 6:19 7 நினைவலைகள்
வியாழன், 19 நவம்பர், 2009
குறுந்தகட்டுக்கிறுக்கல்கள்-1
அறிவிப்பு பலகையில்,
என் விரல் தேடியது
என் பெயரை,
என் விழி தேடியது,
உன் பெயரை....
கண் சிமிட்ட
நினைக்கிறாய்.
நான் அதை பார்த்து
கண் சிமிட்ட
மறக்கிறேன்....
பறித்து,
மருதாணி.....
முகத்தில் தெரியுமாம்.
யார் சொன்னது.
உன் முகத்தின் அழகுதான்
எப்போதும் என்
அகத்தில் தெரியும்.....
எழுத்து: Marimuthu Murugan at PM 12:33 11 நினைவலைகள்
தொகுப்பு: ♥♥♥, அனுபவம், கல்லூரி நினைவுகள், கவிதை, குறுந்தகட்டுக்கிறுக்கல்கள்
வியாழன், 12 நவம்பர், 2009
சேறு
வீட்டைப் பெருக்கும் பொழுதும்...
ஜன்னலோரப் பேருந்தில்,
உன் ஆடையோடு
காற்றுவிளையாடும் பொழுதும்...
எப்படியோ வந்து
என் மனதில்
-------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------
புதன், 4 நவம்பர், 2009
வித்தியாசமா ஒரு வித்தியாசம் கண்டுபிடிப்போம்...
எழுத்து: Marimuthu Murugan at PM 6:16 6 நினைவலைகள்
தொகுப்பு: படங்கள்
திங்கள், 26 அக்டோபர், 2009
பசுமை வயல்.......கரட்டடிபாளையம்.
பச்சைப் பட்டாடையில்
ஓர் ஒற்றை நூல்...
பசுமை வயல்-கரட்டடிபாளையம்..
எழுத்து: Marimuthu Murugan at PM 6:04 6 நினைவலைகள்
தொகுப்பு: எங்க ஊரு, கரட்டடிபாளையம், கவிதை, படங்கள்
வியாழன், 22 அக்டோபர், 2009
திங்கள், 12 அக்டோபர், 2009
பிதாகரஸ் துயரம்!!!! (சாரி தியரம்)
எழுத்து: Marimuthu Murugan at PM 6:43 0 நினைவலைகள்