• முகப்பு
  • .
  • .
  • .
  • .

வெள்ளி, 29 ஜனவரி, 2010

வலைச்சரத்தில்....



<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
ஜனவரி-11 , அன்று வலைச்சரத்தில் இரும்புத்திரை என்னை அறிமுகம் செய்திருந்தார்.


<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
நன்றிகளுடன்,
மாரிமுத்து


ஞாயிறு, 24 ஜனவரி, 2010

மறந்து விடாமல்...





ஜன்னலோர
இருக்கையில்
அமர்ந்தபின்னும்
கவனம் வெளியே
சிதறாமல் இருந்தது அன்று...

கையில் திணிக்கப்பட்ட
பயணச்சீட்டின் பின்புறம்
எழுதியிருந்த
மீதிச் சில்லறை....

வியாழன், 21 ஜனவரி, 2010

இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக...


----------------------------------------------------------------------------------------------------------------------------------
படம்: தமிழ்படம்.
இசை: கண்ணன்.
பாடலாசிரியர்:சந்துரு, அமுதன்
பாடியவர்கள் : ஹரிஹரன், ஸ்வேதா மோகன்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
ஓமகசீயா ஓஹோமகசீயா...
நாக்க முக்க நாக்கா
ஒ ஷக்கலாக்கா
ஓஹோ ரண்டக்கா...
உல்லாஹி உல் லாஹி
ஆய கயாஹி யாஹி...
மேஹூ மேஹூ
டைலாமோ டைலாமோ
ரேஹத்துல்லா சோனாலியோ...

சாம்ப சம்பாலே உசூசே
சாயோ சாயோ
ஹசிலீ பிசிலீ இலாஹி
யப்பாஞ்சிப்பா
டைலாமோ டைலாமோ
பல்லேலக்கா...(நாக்க முக்க..)

ஏ சல சாலா இசக்குபராரா
ஒசக்குமுறாயா
பூம்பூம்சகாக்கா
முக்காலா மையா மையா..
லாலாக்கு லாலாக்கு
டோல் டப்பி மா...(நாக்க முக்க..)

செவ்வாய், 19 ஜனவரி, 2010

சூரிய கிரகணம்

The pin hole projection method மூலம் கங்கண (annulur) சூரிய கிரகணத்தைக் கண்டு களித்தேன்...
எங்கள் வீட்டு மொட்டை மாடியில் வேயப்பட்டிருந்த தென்னங்கீற்றுக் கூரையின் வழியே தரையில் விழுந்த பிம்பங்கள் இதோ....













திங்கள், 11 ஜனவரி, 2010

சிட்டாளு...



ருக்கு வச்ச அருவா
கையில எடுத்துட்டு
கெளம்பிடுவ நெல் அறுக்க,
முறுக்கு தின்ன ஒருவா
பொஸ்தகப்பையில வச்சிட்டு..

சோத்துப் போசியில
நான் சுடுசோத்தப் போட்டுட்டு
பொட்டி தேப்பேன் எஞ்சட்டய,
பள்ளிகோடம் போறதுக்கு,

ன் புதுசட்டயில பிச்செறிஞ்ச
குண்டூசிக் கம்பியெல்லாம்
நாம்பாத்தேன்
உன்செருப்பு வாரு மேல....

ழைத்தண்ணிய நான் பாத்தேன்
ஊட்டுக்குள்ள ஒழுகுறப்போ
ஒங்கண்ணுல ..

நீ
ஞ்சக் காட்டுல பூடு பறிச்சு
மாட்டுக் கொட்டாயில சாணி வழிச்சு
கரும்புத்தோகையுரிச்சு
நடவு நட்டி
நான் முழுசா
எட்டாங்கிளாஸ் படிக்கறதுக்குள்ள
பாதியாய் சுருங்கிப்போனே.

போதுமாத்தா நாம்படிச்சது
போகாதே இதுக்கப்புறம் வேலைக்கு,
கால் வயிறு
தின்னாலும் உங்கையாலே
திங்க வேணும்....
இப்ப நாஞ்சிட்டாளு
நாளைக்கு எனக்கு
கீழ எட்டாளு

சாமி மேல சத்தியமா
எனக்கு எந்த வெசனமுமில்ல,
பள்ளிக்கோட புள்ளைகளெல்லாம்
என்னைத்தாண்டி போகுறப்ப
கண்ணு மட்டும் துளிவேள
கலங்கிடும்...
சித்த நேரத்துல
தெளிஞ்சுடும்......
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
(உரையாடல் அமைப்பு நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது )
-----------------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

குறுந்தகட்டுக்கிறுக்கல்கள்-2




நீ
புல்லாங்குழல்
வாசிக்கிறாய்...
செவிகளில்
தேன் பாய..
புல்லாங்குழலிலும்
தேன் பாய...