• முகப்பு
  • .
  • .
  • .
  • .

திங்கள், 1 பிப்ரவரி, 2010

ஜன்னல் குறிப்புகள்



# உன் முகத்தை
முதலில் எனக்கு
அறிமுகம் செய்தது
ஜன்னல்....

# தொலை தூரப்
பேருந்துப் பயணங்களில்
நீ என்னை விட
அதிகம் நேசிப்பது
ஜன்னலை..

# பேருந்தில் நீ
ஜன்னலோரம்
அமரும்போதெல்லாம்
என் கால்கள்
அனிச்சையாய்
சாலையோரம் வந்துவிடுகிறது..

# உனக்கு பிடிக்காத
புடவைகள் மட்டும்
ஜன்னலுக்குப் பிடிக்கிறது..
ஜன்னல் திரையாய்

# உனக்கு பிடித்த
புடவைகள் மட்டும்
ஜன்னலுக்குப் பிடிப்பதில்லை..
ஜன்னலையொட்டி நீ
நடக்கையில் கம்பியில்
பட்டு கிழித்துவிடுகிறது

# நான் உனக்கு
அளித்த கவிதைகளை விட
ஜன்னலுக்கு அளித்த(எறிந்த)
கவிதைகளே
அதிகம்...

11 நினைவலைகள்:

மணிஜி சொன்னது…

நல்ல கவிதை நண்பரே...

Marimuthu Murugan சொன்னது…

வணக்கம் #தண்டோரா சார்...
உங்களின் முதல் வருகைக்கும் பதிலுக்கும் நன்றிங்க....
உங்கள் கவிதைகளுக்கு நானும் ஒரு ரசிகன்...

நேசமித்ரன் சொன்னது…

வீடுகளின் காதுகள் யன்னல் கதவுகள் காதலுக்கு மட்டும் கண்ணாக வாய்க்கிறது

கவிதை.. !!

:)

Marimuthu Murugan சொன்னது…

//வீடுகளின் காதுகள் யன்னல் கதவுகள் காதலுக்கு மட்டும் கண்ணாக வாய்க்கிறது//

கலக்கலா கவிதையாகவே பின்னூட்டம் போடுறீங்க சார்...

நன்றிங்க #நேசமித்ரன் சார்,,,

ஜெனோவா சொன்னது…

கடைசி ஐந்து வரிகளை மிகவும் ரசித்தேன் ! நடத்து நண்பா !;-)

அடலேறு சொன்னது…

சட்டென ஒட்டிக்கொள்கிறது ஜன்னல் சில குறிப்புகள். ரசனை கவிதை மாரி.

Marimuthu Murugan சொன்னது…

#ஜோ-
#அடலேறு
-
ரசனைக்கு நன்றி நண்பர்களே .....நடத்துவோம்...

சிவாஜி சங்கர் சொன்னது…

தென்றல் வீசும் யன்னல்..

மதுரை சரவணன் சொன்னது…

super. jannal en ithayak kathavai thiranthathu.

Marimuthu Murugan சொன்னது…

//தென்றல் வீசும் யன்னல்.//
//super. jannal en ithayak kathavai thiranthathu.//
#சிவாஜி சங்கர்
#மதுரை சரவணன்

உங்கள் மறுமொழிகள் என் இதயக் கதவைத் திறந்து தென்றல் வீசிச் சென்றது..
நன்றிகள்....

நாணல் சொன்னது…

:) அழகு ஜன்னல்