• முகப்பு
  • .
  • .
  • .
  • .

வெள்ளி, 23 ஜூலை, 2010

நீ - மழை நேர மழலையடி



xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ரம் சேகரித்து வைத்த
மழைத்துளிகளால்
நீ நனைந்து
சிலிர்ப்பதைக் காண
காத்திருக்கிறேன்.
மரத்தடியில் ...

நீ மரத்தருகே
வருவதைக் கண்டதுமே
சிலிர்த்தது என்னவோ
மரம்...

நனைந்தது
என்னவோ
நான் தான்...
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ன்னை போலவே தான்
எனக்கும்,
மழை நின்ற பின்
யூகலிப்டஸ் மரச்சாலையில்
நடந்து செல்லப் பிடிக்கும்.

உன்னை போலவே தான்
எனக்கும்,
மழை வரும் போது
காகிதக் கப்பல் செய்து
விளையாடும்
மழை நேர மழலையாய்
மாறப் பிடிக்கும்...

உன்னை போலவே தான்
எனக்கும்,
மழை நேரத்தில்
சாலையைக் கடந்த
தவளைகளைப் பிடிக்காது...

ஆனால்
இடி மின்னலோடு
மழை பெய்கையில் மட்டும்,
உன்னைப் போல
காதைப் பொத்தி
"அர்ஜுனா அர்ஜுனா"
என்று நான் கூறுவதில்லை...

மாறாக,
உன் பெயரைத்தான்
உரக்கக் கத்துவேன்....
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

வியாழன், 1 ஜூலை, 2010

பாத்திரங்கள்..


.........................................................................................................
பாத்திரங்களையெல்லாம்
சுத்தம் செய்து வைக்கும்
பாத்திரமாக
அக்கா ..

சாப்பிட்ட பாத்திரங்களைக் கூட
கழுவாமல்
அப்படியே எறிந்துவிட்டுச்
செல்லும் பாத்திரம்
நான்...

வ்வளவு கஷ்டத்திலும்
வீட்டுப் பாத்திரங்களில்
உணவுக்கு குறை இன்றி
குடும்பத்தை காக்கும்
பாத்திரமாய் அப்பா...

ழை வரும் போது
வீட்டில் ஒழுகும் இடங்களில்
ஓடிச் சென்று
பாத்திரங்களை வைக்கும்
பாத்திரம்
அம்மா ...
........................................................................................................