• முகப்பு
  • .
  • .
  • .
  • .

வியாழன், 7 அக்டோபர், 2010

கவிதை விதை விதைத்தவள்..



`````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
. ஒரே ஒரு விதைதான்
நீ விதைத்தாய்.
கணக்கற்ற கவிதைகள்
முளைக்கின்றன
என்னுள்..

. உன் சேலையின் நீளத்திற்கொரு
கவிதை இயற்றினேன்..
தலைப்பு மட்டும் கிடைக்கவில்லை.
கொஞ்சம் கொடேன்.
உன் சேலைத் தலைப்பை...

. இவ்வளவு அழகாக
கவிதை எழுதிப் போகிறாய்.
திசுத்தாளில் உதட்டுச்சாயம்..

. நான் என்ன எழுதினாலும்
அது கிறுக்கலாய் முடிகிறது.
நீ என்ன கிறுக்கினாலும்
அது கவிதையாய் முடிகிறது..

௫. நீ எப்போதும்
என்னுடன் இருக்க வேண்டும்.
நான் கவிதை எழுதும் நேரம் தவிர.

நீ அருகே இருந்தால்
எனக்கு பேச்சே வராது.
கவிதை மட்டும் எப்படி வரும்?.

. உன் பிறந்தநாளில்
நான் எழுதிய கவிதையொன்று..
" பூமியில் வாழும் நிலவொன்று
இருபத்து மூன்றாவது முறை
சூரியனைச் சுற்ற கிளம்பிய தினம்"
``````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````