• முகப்பு
  • .
  • .
  • .
  • .

புதன், 14 ஆகஸ்ட், 2013

மழைக்கு ஒதுங்கும் கவிதை





மழையில் நனைந்த என்னை
வீட்டிற்கு வெளியே 
நிற்க வைத்து முறைப்பாய்.

கோபத்தில் கடிந்துகொள்வாய்,
என்னையும் மழையையும்.

ஈரமான கைகளில் 
தேநீர் தருவாய், சூடாக.

அடுத்த நாளிலிருந்து 
குடை எடுத்து செல்ல 
மறக்காமல் நினைவூட்டுவாய்.

இவற்றிற்காக மட்டும்
நான் மழையில் நனைவதில்லை.

நீ
கூந்தல் உலர்த்திய
ஈரத் துண்டால் 
தலை துவட்டி விடுவாயே,
அதற்காகவும் தான்