
`````````````````````````````````````````````````````````````````
இனிமேல்
தேர்வு சமயங்களில்
உனது புத்தகங்களை
நான் இரவல் வாங்கமாட்டேன்....
பின்னென்ன..
இரண்டு நாட்களா
க
உன் பெயர் பொறித்த
முதல்
பக்கத்தையே நான்
வெறித்துக் கொண்டு இருந்தால்
மற்ற பக்கங்களை எப்போ
முடிப்பதாம்..
`````````````````````````````````````````````````````````````````