
___________________________________________________________________
வீட்டில் பணத்தைத் திருடியதால்
தன்னோடு யாரும்
முகம் கொடுத்துப் பேசுவதில்லை
என்பதை தலைகுனிந்து,
கண்கள் குளமாக
அவனிடம் சொல்லிகொண்டிருந்தான் ...
இவன் ,
இடக்கை
அவனை அறியாமல்
இவனைத் தேற்றியது...
வலக்கை
இவன் அறியாமல்
சட்டைப்பை பணத்தை
தொட்டுப் பார்த்தது ..
___________________________________________________________________