
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
♥ஆய்வகத்துக்குள்
நுழையும் முன்பே,
ஆய்வு செய்யத்
துவங்கிவிட்டேன்.
உன்னை.
♥ என்னருகில் வந்து
திருகு அளவியின் புரியிடைத்தூரம் பற்றி
கேட்கிறாய்.
எனக்குத் தெரிந்தது எல்லாம்
வெறும் 'இடை'த்தூரம்தான்.
♥உன் கன்னக் குழியாடியின் மேல்,
என் முத்தங்களின் குவியதூரம் எவ்வளவு?.
♥ ஊசலின் அலைவு நேரத்தைக் கவனிக்கும் நீ
ஊசலாடும் என் இதயத்தையும் கொஞ்சம் கவனி.
♥தவறாமல்
தவறான திசையையே
காட்டுகிறது.
காந்த மானி.
உன் காந்தக் கண்களை
வேறு பக்கமாய்த் திருப்பு.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,