• முகப்பு
  • .
  • .
  • .
  • .

வியாழன், 24 பிப்ரவரி, 2011

♥ கவிதைக்கூடம் ♥





,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

♥ஆய்வகத்துக்குள்

நுழையும் முன்பே,

ஆய்வு செய்யத்

துவங்கிவிட்டேன்.

உன்னை.



♥ என்னருகில் வந்து

திருகு அளவியின் புரியிடைத்தூரம் பற்றி

கேட்கிறாய்.

எனக்குத் தெரிந்தது எல்லாம்

வெறும் 'இடை'த்தூரம்தான்.



♥உன் கன்னக் குழியாடியின் மேல்,

என் முத்தங்களின் குவியதூரம் எவ்வளவு?.



♥ ஊசலின் அலைவு நேரத்தைக் கவனிக்கும் நீ

ஊசலாடும் என் இதயத்தையும் கொஞ்சம் கவனி.



♥தவறாமல்

தவறான திசையையே

காட்டுகிறது.

காந்த மானி.

உன் காந்தக் கண்களை

வேறு பக்கமாய்த் திருப்பு.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

வியாழன், 7 அக்டோபர், 2010

கவிதை விதை விதைத்தவள்..



`````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
. ஒரே ஒரு விதைதான்
நீ விதைத்தாய்.
கணக்கற்ற கவிதைகள்
முளைக்கின்றன
என்னுள்..

. உன் சேலையின் நீளத்திற்கொரு
கவிதை இயற்றினேன்..
தலைப்பு மட்டும் கிடைக்கவில்லை.
கொஞ்சம் கொடேன்.
உன் சேலைத் தலைப்பை...

. இவ்வளவு அழகாக
கவிதை எழுதிப் போகிறாய்.
திசுத்தாளில் உதட்டுச்சாயம்..

. நான் என்ன எழுதினாலும்
அது கிறுக்கலாய் முடிகிறது.
நீ என்ன கிறுக்கினாலும்
அது கவிதையாய் முடிகிறது..

௫. நீ எப்போதும்
என்னுடன் இருக்க வேண்டும்.
நான் கவிதை எழுதும் நேரம் தவிர.

நீ அருகே இருந்தால்
எனக்கு பேச்சே வராது.
கவிதை மட்டும் எப்படி வரும்?.

. உன் பிறந்தநாளில்
நான் எழுதிய கவிதையொன்று..
" பூமியில் வாழும் நிலவொன்று
இருபத்து மூன்றாவது முறை
சூரியனைச் சுற்ற கிளம்பிய தினம்"
``````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````

வெள்ளி, 23 ஜூலை, 2010

நீ - மழை நேர மழலையடி



xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ரம் சேகரித்து வைத்த
மழைத்துளிகளால்
நீ நனைந்து
சிலிர்ப்பதைக் காண
காத்திருக்கிறேன்.
மரத்தடியில் ...

நீ மரத்தருகே
வருவதைக் கண்டதுமே
சிலிர்த்தது என்னவோ
மரம்...

நனைந்தது
என்னவோ
நான் தான்...
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ன்னை போலவே தான்
எனக்கும்,
மழை நின்ற பின்
யூகலிப்டஸ் மரச்சாலையில்
நடந்து செல்லப் பிடிக்கும்.

உன்னை போலவே தான்
எனக்கும்,
மழை வரும் போது
காகிதக் கப்பல் செய்து
விளையாடும்
மழை நேர மழலையாய்
மாறப் பிடிக்கும்...

உன்னை போலவே தான்
எனக்கும்,
மழை நேரத்தில்
சாலையைக் கடந்த
தவளைகளைப் பிடிக்காது...

ஆனால்
இடி மின்னலோடு
மழை பெய்கையில் மட்டும்,
உன்னைப் போல
காதைப் பொத்தி
"அர்ஜுனா அர்ஜுனா"
என்று நான் கூறுவதில்லை...

மாறாக,
உன் பெயரைத்தான்
உரக்கக் கத்துவேன்....
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx