• முகப்பு
  • .
  • .
  • .
  • .

புதன், 21 ஏப்ரல், 2010

குறுந்தகட்டுக்கிறுக்கல்கள்-4




`````````````````````````````````````````````````````````````````
னிமேல்
தேர்வு சமயங்களில்
உனது புத்தகங்களை
நான் இரவல் வாங்கமாட்டேன்....

பின்னென்ன..
இரண்டு நாட்களா
உன் பெயர் பொறித்த
முதல்
பக்கத்தையே நான்
வெறித்துக் கொண்டு இருந்தால்
மற்ற பக்கங்களை எப்போ
முடிப்பதாம்..
`````````````````````````````````````````````````````````````````

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

வேலை தேடும் வேலை(ளை)யில் ...



மூடிய கண்களின் மேல்
சிவப்பாய் ஏதோ தெரிய..
விழித்துப் பார்த்தால்
அன்றைய தினம்
என்னை எழுப்ப வந்த
நண்பன் சூரியன்....

எழுந்து பார்த்தால்
சமையலறையில்
மூன்று வேளைச் சோறு மட்டும்
என்னைப் பார்த்துப்
பல்லிளிக்கிறது ...

வயிற்றுக்கு உணவு செல்லாத
நிறைய வேளைகளில்
செவிக்கு உணவு தந்தன
ஊர் நூலகமும்,
உலவு மையங்களும்,

சில சமயங்களில்
சும்மா என்கிற
சாதாரண வார்த்தையை
எடுத்து கூர்தீட்டிக்
குத்திக் காட்டினார்கள்
சுற்றத்தார்கள்....

யாருமற்ற பகல்கள் மட்டும்
மெதுவாக இரவை நோக்கி
கர்ந்தது

யாவரும் உள்ள இரவுகளோ
வேகமாக விடியலை நோக்கிச்
சென்றது...

பிறகு,
மூடிய கண்களின் மேல்
சிவப்பாய் ஏதோ தெரிய....
............................................