சுயசேவை உணவகம் - self service hotel
வியாழன், 24 டிசம்பர், 2009
யாரிவன்?....
சுயசேவை உணவகம் - self service hotel
எழுத்து: Marimuthu Murugan at PM 5:08 5 நினைவலைகள்
வெள்ளி, 18 டிசம்பர், 2009
மின்கவிதை..
புதன், 16 டிசம்பர், 2009
சட்டென ஒட்டிக்கொண்ட பாடல்...
Drag from here
இரு சக்கரவாகனமாக அவளது விழிகள்
விபத்தாகி விழுந்தது ஏனோ எனதிரு விழிகள்
அவள் புருவத்தை சாய்த்துப் பார்க்கவில்லை
புன்னகையில் ஒரு மாற்றமில்லை
கால் விரலால் நிலம் தோண்டவில்லை
கடந்தபின் திரும்பி சிரிக்கவுமில்லை
எப்படி என்னுள் காதல் வந்தது
எப்படி என்னுள் காதல் வந்தது
எச்சில் உணவு கொடுக்கவில்லை
எனக்காய் இரவில் விழிக்கவில்லை
பார்த்ததும் ஆடை திருத்தவில்லை
பாஷையில் முனைகளை சேர்க்கவுமில்லை
எப்படி என்னுள் காதல் வந்தது
எப்படி என்னுள் காதல் வந்தது
என்னைப் பார்த்ததும் குழந்தையைத் தூக்கி முத்தம் கொடுக்கவில்லை
என் பேர் கேட்டதும் கன்னங்கள் இரண்டும் சிவந்துப்போகவில்லை
என் தெருவில் அவள் அடிக்கடி தினுசாய் திரிந்து பார்த்ததில்லை
என்னிடம் எதுவும் பிடித்ததுபோல புகழ்ந்து உரைத்ததில்லை
ஆனாலும் …. ஆனாலும் … ஆனாலும் . .
எப்படி என்னுள் காதல் வந்தது
அதை என்னிடமே தான் கேட்கத்தோணுது
என்னிடம் உள்ள கெட்டப்பழக்கத்தை தட்டி கேட்டதில்லை
சாப்பிடும்போது அவளை நினைத்து நான் தும்மல் போட்டதில்லை
அவள் கனவில் நானும் வந்து போனதாய் எந்தச் சுவடுமில்லை
ஒரு நாள் கூட நள்ளிரவில் குறுஞ்செய்தி வந்ததில்லை
ஆனாலும் …. ஆனாலும் … ஆனாலும் . ...
எப்படி என்னுள் காதல் வந்தது
அதை எப்படி நான் போய் சொல்வது
[அவள் புருவத்தை ...]
Stop Dragging
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
எழுத்து: Marimuthu Murugan at PM 2:11 4 நினைவலைகள்
தொகுப்பு: பிடித்த பாடல்
திங்கள், 14 டிசம்பர், 2009
கலைத்தல்....
எழுத்து: Marimuthu Murugan at AM 11:23 10 நினைவலைகள்
திங்கள், 7 டிசம்பர், 2009
பிறந்தநாள் பரிசு
காம்பைக் கிள்ளி
கையில் வைத்துக்கொண்டு
என்னைத் தேடிய அமத்தா..
அழுகின்ற என்னைத் தேற்ற
அம்மாவிடம் பொய்யாய் அடிவாங்கி
பொய்யாய் அழுது என்னை
சிரிக்க வைத்த அண்ணா....
நான் கழற்றி வைத்த
சட்டைப் பையில்
பீடிக்கும் டீக்கும் உரிமையோடு
காசு துழாவும் அப்பா....
வயிறு எவ்வளவு வளர்ந்தாலும்
ஏண்டா இளைச்சுட்டேன்னு
கூசாமல் கேட்கும் அம்மா...
நீங்கள் எல்லாம் என்னை
வழியனுப்பிவிட்டு திரும்பும்போது
எனக்குத் தெரியாமல்
உங்கள் கண்களில் இருந்து
வந்த ஒரு சொட்டு
கண்ணீர்த்துளியில் இருந்து
எடுத்துக்கொண்டேன்
என் பிறந்தநாள் பரிசை..
எழுத்து: Marimuthu Murugan at AM 9:55 9 நினைவலைகள்
தொகுப்பு: அனுபவம், கவிதை, சுயபுராணம்